Sunday, August 3, 2014

வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பு: சட்டங்களை கடுமையாக்க நிதியமைச்சகம் திட்டம்












 புதியதலைமுறை ஜூலை 31, 2014, 10:55:08 AM

வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வரும்
நிலையில் கடன் வசூலிப்பு சட்டங்களை
கடுமையாக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடன் வசூல் சட்டங்களில்
செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த
பரிந்துரையை அளிக்க நிபுணர் குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடன்
வசூல் சட்டங்களில் ஏமாற்றுவோர் தப்பிக்க
வழிகள் அதிகம் இருக்கும் நிலையில் இவற்றுக்கு
மாற்று வழிகளை நிபுணர் குழு கண்டறியும்.
நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினால்
அவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்து
கடனை நேர் செய்யும் சர்ஃபாசி சட்டத்திலும்
இக்குழு திருத்தங்களை மேற்கொள்ளும்
எனத் தெரிகிறது. இந்தியாவில் 2 லட்சத்து
40 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனாக
உள்ளது. கடனில் தத்தளிக்கும் நிறுவனங்கள்
பலவற்றின் உரிமையாளர்கள் செல்வச்
செழிப்பில் திளைப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment