Monday, August 4, 2014

தமிழகத்தில் வாராக்கடன் நிலுவை ரூ.5,003 கோடி


தினமலர்திங்கள், ஆகஸ்ட் 4, 2014

தமிழகம் முழுவதும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், வாராக்கடன் நிலுவை, 5,003 கோடி ரூபாய் இருப்பதாகவும், நாடு முழுவதும், 1.64 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாகவும், பிரபல தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் எவ்வளவு கடன் வைத்துள்ளது என்பதை, சேலம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் பட்டியலாக வெளியிட்டுள்ளது.இந்தியா முழுவதும், 1.6 லட்சம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இவற்றில், அதிகாரிகள், ஊழியர்கள் என, ஏழு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஐந்து ஊழியர் சங்கமும், நான்கு அதிகாரிகள் சங்கமும் செயல்பட்டு வருகிறது. தேசிய மயமான வங்கிகளை, தனியார் வசம் ஒப்படைப்பதற்கும், புதிய தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கும், வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வங்கிகளை காப்பாற்றும் பொருட்டு, பிரபல தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு கடன் வைத்துள்ளது என்பதை, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், சமீபத்தில் புத்தக வடிவில் வெளியிட்டது. அதேபோல், சேலம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், மாநில அளவில், வங்கிகளில் உள்ள வாராக்கடன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 378 தொழில் நிறுவனங்கள், 5,003 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.வங்கி ஊழியர் சங்க, பொதுச்செயலாளர், சுவாமிநாதன் கூறியதாவது:
வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கிகள் கொடுத்துள்ள கடன்களை திருப்பி செலுத்துவதில், தொழில் நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை. வங்கி நிர்வாகமும், அவற்றை வசூலிப்பதில் மெத்தனத்தை கடைபிடித்து வருகிறது. தமிழகத்தில், 85 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. கிராமப்புறங்களில், 44 ஆயிரம் கிளைகள் செயல்படுகின்றன. வங்கி டெபாசிட் தொகை, 80 லட்சம் கோடியாகவும், கடன், 62 லட்சம் கோடியாகவும் உள்ளது. வங்கி பணியில், 10.68 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
வங்கியை காப்பாற்ற வேண்டுமெனில், வாராக்கடனை வசூலிப்பதில், மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும். 378 தேசிய வங்கிகளில், 5,003 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இவற்றை வசூலிக்காவிட்டால், விரைவில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Click Here

No comments:

Post a Comment