Saturday, July 12, 2014

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமனம்
சனி, ஜூலை 12, 2014

சென்னை ஐகோர்ட் புதிய நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். எஸ்.கே.கவுலுக்கு 55 வயது ஆகிறது. டெல்லியைச் சேர்ந்த இவர் 1982ஆம் ஆண்டு வக்கீல் ஆனார். டெல்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பணியாற்றினார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பஞ்சாய், அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஒரு சில தினங்களில் அவர் பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment