Saturday, March 9, 2013

11-ல் நீதிமன்றப் புறக்கணிப்பு


ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் வழக்குரைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மார்ச் 11ஆம் தேதி (திங்கள்கிழமை) நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் மற்றும் சண்டீகர் நகரங்களில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றன. இந்த தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இந்த சம்பவங்களைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞர்கள் அகில இந்திய அளவில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 11) நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் திங்கள்கிழமை வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய பார் கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி. செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment