Friday, March 8, 2013

சென்னையில் இன்று வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்






First Published : 08 March 2013 03:52 AM IST
ராஜஸ்தானில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இளம் வழக்குரைஞர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை நோக்கி அம்மாநில வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஊர்வலம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய இந்தத் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், பெண் வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன.



No comments:

Post a Comment